Thursday, May 22, 2008

ஏகாதிபத்திய முதலாளிகள் Vs ஏமாந்த தொழிலாளிகள்


கரூர்,திருப்பூர் - தமிழகத்தின் வீட்டு ஜவுளி ஏற்றுமதி துறையில் பெரும் பங்கு வகிக்கும் நகரங்கள். இந்த சாதனைக்கு பின்னால் உள்ள வேதனையை வெளிக்கொணரும் சிறு முயற்ச்சியே இந்த பதிவு.

இம்மாதிரியான நகரங்களில் நடக்கும் ஏற்றுமதி தொழிலில் வளம் பெறுவது முதலாளி வர்க்கம் மட்டுமே என்பது வேதனைக்குரிய விஷயம்.அரசு இயற்றிய நடைமுறைகளும் சட்டங்களும் எட்டளவில் மட்டுமே இருப்பது வேடிக்கையான விஷயமும் கூட. இந்த முதலாளிகள் தூக்கி எறியும் லஞ்சம் எனும் எலும்புதுண்டுக்காக அடித்துக்கொள்ளும் நாய்களாய் மட்டுமே அரசு அதிகாரிகள் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்.

ஏற்றுமதி நகரத்தின் பின் உள்ள நரகம்

காலை 9.30 மணி வீதிகளில் விரையும் வாகனங்கள்; ஆடு,மாடுகளை போல் அடைக்கப்பட்டு அழைத்து வரப்படும் தொழிலாளர்கள். இந்த காட்சியை இந்நகரங்களில் சர்வசாதரணமாக பார்க்க முடியும். 30 பேர் பயணம் செய்யக் கூடிய வாகணத்தில் 70 பேரை அனாசயமாக ஏற்றி செல்லும் திறமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் கேட்க ஆட்களில்லையா? வென நினைக்கிறீர்களா? ஏன் இல்லை? ஆனால் பாவம் அவர்களுக்கு தீபாவளி,பொங்கல் நாட்களில் மட்டுமே எலும்பு துண்டை பொறுக்கும் வேலையிருக்கும்.

ஒரு வழியாக மரண பயணம் முடிந்தவுடன் தொழிற்சாலையை அடைந்தால் மேற்பார்வையாளர் அடுத்த கொடுமைக்கு தாயராக இருப்பார். தன்ணை நன்றாக கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கும் மேற்கண்ட வேலைகளுக்கு உதவி புரியும் ஆண்களுக்கு எளிதான வேலையும், முரண்டு பிடிக்கும் அகங்காரம்(அவர்களுடைய மொழியில்) பிடித்தவர்களுக்கு கடினமான வேலையும் கொடுத்து அன்றைய நாள் ஆரம்பமாகும்.

அடுத்து இனிதே வரும் தேனீர் இடைவேளை. பால்குடி வயதோடு மறந்து போன சங்கை நினைவூட்டும் டம்ளர்கள்.அந்த பாதி டம்ளர் டீயையும் பெறும் பாக்கியம் பாதி பேருக்கு கிட்டாது.

ஒரு வழியாக இரவு 7 மணிக்கு வேலை முடிந்தது என்று வெளியெ வந்தால் அவ்வளவுதான். சூப்ரவைசர் சிங்கத்திற்கு கோவம் வந்து விடும். சிப்மெண்ட் அவசரம் இன்று இரவு வேலை என பெண்களை(பிடித்த) மட்டும் இருக்கச் சொல்லும். 12 மணியளவில் வேலைகளை முடித்து விட்டு மீண்டும் ஆரம்பமாகும் மரண பயணம்.

மாதத்தில் ஒருநாள் வருவார் கன்சல்டண்ட்.வேறொன்றுமில்லை புதிதாக ஒரு வாடிக்கையாளர்(வால் மார்ட்,கே மார்ட் வகையறா) வருகை தர இருப்பதாகவும் அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை அளிக்க ஒரு பயிற்சி தருவதாகவும் சில லட்சங்களை பிடுங்கி விட்டு போவர். "முறையான" பயிற்சியின் முடிவில் நிறுவனம் இந்த ஆர்டர் கிடைத்தால் உங்களுக்கு பல வசதிகளை செய்து தரும், எனவே சொல்லி தரப் பட்ட பதில்களை கூறி நிறுவனத்தை தூக்கி நிறுத்தும்படி வேண்டுகோள் ஒன்றினை விடுப்பார்.நமது அப்பாவி பலியாடுகளும் ஓநாய்களின் மானத்தை காப்பாற்ற பதில்களை இரவு முழுவதும் மனப்பாடம் செய்து விசுவாசமாய் ஒப்பிப்பர்.

நமது மதிப்பிற்குரிய வாடிக்கையாளரும் வருகை தந்து, முதலாளிகளின் "வரவேற்பில்" மனம் மகிழ்ந்து , தொழிலாளிகளின் பதிலில் புல்லரித்து போய் ஆர்டர்களை அள்ளி கொடுத்து செல்வர்.அதன் பின்னால் ஆரம்பிக்கும் பழைய கொடுமை.

கரூர் நகரத்தின் கொடுமைகள் சில

1) தொழிலாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை

2) ESI, PF போன்ற திட்டங்கள் நடைமுறைபடுத்தபடுவதில்லை

3) அரசு விதித்துள்ள 8 மணி நேர வேலை முறை பயன்பாட்டில் இல்லை

4) அரசு விடுமுறை நாட்களிலும் வேலை செய்யும் அவலநிலை

5) குழந்தை தொழிலாளர் நடைமுறையிலுள்ளனர்

6) பல தொழிலாளர்களுக்கு இன்னமும் தங்களுடைய குறைந்தபட்ச கூலி என்பது என்னவென்றே தெரியாத கொடுமை

7) அடிப்படை வசதிகள் கூட சரியில்லாத தொழிற்ச்சாலைகள் எத்தனை எத்தனை.

8) casual leave க்கு கூட சம்பளம் பிடிக்கும் முதலாளி வர்க்கம்.

9) கூலி வேலைக்கு வரும் பெண்களை பாலியல்ரிதியிலான கொடுமைக்கு தள்ளும் முதலாளி வர்க்கம்.

10) கொத்தடிமைகளைப்போல் தொழிலாளிகளை நடத்தும் தொழிற்சாலைகள்

11) முழு இரவு வேலை செய்து விட்டு போனாலும் மறுநாள் காலை 9:30 க்கு வராவிட்டால் வசவுகளை கொட்டும் வக்கிரம்.

ஆகவே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் மக்களே நீங்கள் வால்மார்ட், கே மார்டில் வாங்கும் எல்லா பொருட்களிலும் எங்கள் தொழிலாளியின் வியர்வையும் ரத்தமும் உறைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

3 comments:

Santhosh said...

Very good article.. keep it up. one request can you remove word verification in comments..

கோவை சிபி said...

திருப்பூர் பற்றிய தற்போதைய நிலவரத்தை அறியாமல் எழுதப்பட்டதாக தெரிகிறது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஏட்டளவில் இல்லாமல் இந்திய அளவில் மற்றதொழில்மையங்களில் உள்ளதை விட் சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது.மற்றும் தொழிலாளர் பணிச்சூழல் கடந்த 5 வருடங்களில் பலமடங்கு மேம்பட்டிருக்கிறது.இது நான் நேரில் கண்டது.

வேலு பாரதி said...

//சந்தோஷ் = Santhosh said...
Very good article.. keep it up. one request can you remove word verification in comments..
//

சந்தோஷ் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.