Monday, May 26, 2008

வாழ்க மக்களாட்சி!!!!!!

இலவசமெனும் எலும்பு காட்டி
இச்சை தீர்த்தனர் பதவி வெறியர்கள்

இளிச்சவாயர்கள் இட்ட வாக்கில்
இனிதே ஆரம்பபானது இருண்டகாலம்

மளிகை,மண்ணெண்ணெய் விலையுர்வு
மலிவு விலை மதுவில் மறந்து போனது

கழிவுநீர் கடலும், அழுக்கு சுமக்கும் ஆறும்- இலவச
கலர் டி.வி. கவர்ச்சியில் காணாமல் போனது.

இருக்கும் விவசாயிக்கே தண்ணிரில்லை-இலவச
நிலத்தில் என்ன விதைப்பது?


கட்டுமான பொருளின் விலையை கட்டுபடுத்த முடியவில்லை
கேபிள் டி.வி.யை கட்டுபடுத்த ஏனோ அவசரம்?

பிழைப்புக்கு கடல் தாண்டும் மீனவர்களை காக்க முடியாதவர்களுக்கு
பிடுங்குவதற்கா கப்பல்துறை?

இறங்கி உதவ துப்பில்லை-இலங்கை தமிழர்களுக்கு
இரங்கல் கவிதை யாருக்கு வேண்டும்?

மாமன்,மருமகன் பிரச்சினையில்
மக்களை நிணைக்க நேரமேது?

கூட்டணி தர்மம் என்ற பெயரில்
கூட்டு களவாணிக்கு துணை போகும் கட்சிகளும்
சினிமாலும்,சீரியலிலும்
சிந்தை மறந்த நாமும் இருக்கும் வரை
நன்றாகவே நடக்கும் மக்களாட்சி

No comments: